இங்கிலீசு தமிழச்சி என அன்புடன் அழைக்கப்படும் இளம்கவி ப.லட்சுமி பிரியா அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. கவிதை வானில் சிறகுவிரித்துப் பறக்கும் இவரது சிந்தனைகள் வாசிப்போரையும் சுமந்து செல்கின்றன. வாழ்வின் பல்வேறு தளங்களில் பேசும் இவரது கவிதைகளில் எதார்த்தம் மிளிர்வதைப் போல, பெண்கள் பற்றிய கவிதைகளில் வீரம் பிறக்கிறது. பெண்களின் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து புதுமை படைக்கும் நம்பிக்கையைத் தரும் இக்கவிதை தமிழுலகிற்குத் தேவையான வரவு.


நூல் விலை - ரூபாய் 60

மின்னஞ்சல் - verkalaithedipublication@gmail.com 


அலைபேசி - 9524439008

Post a Comment

Previous Post Next Post