வானில் தோன்றிய நட்சத்திரங்களாய், மரங்களில் பூத்த மலர்க்கூட்டஙகளாகளாய்
இங்கே மாணவிகள் சேர்ந்து கவிதை எழுதியுள்ளனர்.
சங்ககாலம் தொடங்கி இன்றுவரை பெண் கவிஞர்களின் எண்ணிக்கை குறைவாகத்தானே உள்ளது.
இதோ வள்ளுவனின் வழியில், பாரதியின் மொழியில், சேக்சுபியரையும், செல்லி, கீட்சையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தளிக்கிறோம் என்று கவிதையுலகில் காலடிவைத்துள்ளனர்,
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயிலும் பல்வேறு மாணவிகள். ஆங்கிலத்துறை பயின்றாலும் தமிழில் கவிதை எழுதும் இவர்களின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. தமிழ் எழுத்துலகிற்கு இளம் படைப்பாளிகளை அன்புடன் வரவேற்கிறேன். இவர்களை நெறிப்படுத்தி இந்த நூல் தொகுத்த ஆங்கிலப் பேராசிரியை அனுமுருகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூலில் கவிதை எழுதிய மாணவிகள் எதிர்காலத்தில் தொடர்ந்து கவிதை எழுதி தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய உலகில் பெரிய உயரங்களை அடைய எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


நூல் விலை - ரூபாய் 80

மின்னஞ்சல் - verkalaithedipublication@gmail.com 

அலைபேசி - 9524439008

Post a Comment

Previous Post Next Post